search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் படுகாயம்"

    துறையூர் பெரிய ஏரிக்கரையில் செச்சை முனி ஆண்டவர் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரையில் செச்சை முனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நல்ல மழைபெய்யவும், மக்கள் நலமுடன் வாழவும்  ஊச்சாத்துரை திருவிழா  நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஊச்சாத்துரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு மூங்கில் தெப்பகுளத்தில் இருந்து புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    பின்னர் செச்சைமுனி ஆண்டவருக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைநடைபெற்றது. மாலை செச்சை  மூனீஸ்வரர் சிரசு திருவீதிஉலா தொடங்கி  மூங்கில் தெப்பகுளம் வழியாக பாலக்கரை சின்னகடை வீதி பெரியகடை வீதி வந்தது. பக்தர்கள் சிரசு எடுத்து வரும்போது இருதரப்புக்கு இடையே திடீரென தகறாறு ஏற்பட்டது. 

    இதில் இருதரப்பினரும், கற்களால் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த லோகநாதன் (24) திவாகர் (19 )பரத்(30) பாபு(32), தமிழ்(18), சிவா(18) ஆகிய 6 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த துறையூர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் காயமடைந்தனர்.

    இது குறித்து துறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன்(50) செல்வராஜ்(42)  ராமசாமி(60) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். 
    ×